தஞ்சை, நவ. 27: தஞ்சை அரசர் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு இலவச லேப்டாப் கேட்டு மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள அரசர் மேல்நிலைப்பள்ளியில் கடந்தாண்டு பிளஸ் 2 படித்து முடித்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இதுவரை தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்கவில்லை. இதையடுத்து லேப்டாப் கேட்டு முன்னாள் மாணவர்களும், இந்திய மாணவர் சங்கத்தினரும் நேற்று பள்ளி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் அபிஷேக் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அரவிந்தசாமி உட்பட ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.