×

தச்சமொழியில் 2 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத அங்கன்வாடிமையம் வாடகை கட்டிடத்தில் இயங்குவதாக புகார்

சாத்தான்குளம், நவ. 27: தச்சமொழியில் அங்கன்வாடி மையம் 2ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் காட்சி பொருளாக உள்ளது. இதனால்  வாடகை கட்டிடத்தில் செயல்படுவதாக  பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சாத்தான்குளம் பேரூராட்சிக்குட்பட்ட தோப்புவளம் சாலையில் தச்சமொழியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. இதில் அப்பகுதியை சேர்ந்த 40க்கு மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இக்கட்டிடம் பராமரிக்கப்படாதால் கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு அதன் மேற்கூரை சிமென்ட் பூச்சு திடீரென பெயர்ந்து விழுந்தது. அப்போது குழந்தைகள் இல்லாததால் காயமின்றி தப்பினர். உடனே  அதிகாரிகள் பார்வையிட்டு அங்கன்வாடி மையம் பராமரிக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் அருகிலுள்ள வாடகை கட்டிடத்துக்கு அங்கன்வாடி மாற்றப்பட்டது. அதன்பின் கட்டிடம் எந்தவித பராமரிப்புமின்றி சேதமடைந்து காணப்படுகிறது.

தற்போது பழுதான கட்டிடம்  பூட்டிய நிலையில் காட்சி  பொருளாக காணப்படுகிறது. இது குழந்தையின் பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையை மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே  பழுதான அங்கன்வாடி மையத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த அங்கன்வாடி மையம் சீரமைக்கப்படாததால் விஷஜந்துகள் வாழும் பகுதியாக மாறி வருகிறது. இதை பழுதுநீக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். இதேபோல் சாத்தான்குளம் பேரூராட்சி பகுதி தெற்கு ரதவீதியில் அங்கன்வாடி மையம்  சீரமைக்கப்படாமல் அபாய நிலையில் உள்ளது. அதனையும் சீரமைக்க வேண்டும் என்றனர்.

Tags : carpenter ,building ,
× RELATED விபத்தில் கார்பெண்டர் பலி இழப்பீடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி