×

வேதாரண்யத்தில் மழைக்கால நிவாரணம் வேண்டி மீனவர்கள் மனு

வேதாரண்யம், நவ.27: வேதாரண்யத்தில் மழைக்கால நிவாரணம் கேட்டு மீனவர்கள் தாசில்தாரிடம் மனு அளித்தனர்.வேதாரண்யம் தாலுகா மணியன் தீவில் கடந்த 50 ஆண்டுகளாக கடல் மீனவர் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தின் மூலம் மீனவர் சேமிப்பு மற்றும் அரசு நிவாரண உதவிகள் அனைத்தும் கிடைக்க பெற்று வருகின்றன. இயற்கை சீற்றங்கள், சுனாமி புயல் வௌ்ள அபாய காலங்களில் எங்கள் கிராமத்தை மீனவர் கிராமம் என்று அறிவித்து அதன் அடிப்படையில் நிவாரணங்கள் வழங்கப்பட்டது. ஆனால் 2019 ஆண்டு மீனவர்களிடமிருந்து சிறுசேமிப்பு தொகைவசூல் செய்யப்பட்டது. சேமிப்பு மற்றும் அரசு தடைக்கால நிவாரணத்தில் சிறுசேமிப்பு தொகை மட்டும் கிடைக்க பெற்றுள்ளது. ஆனால் மழைக்கால் நிவாரணம் கிடைக்க வில்லை. எனவே அனைத்து மீனவர்களுக்கும் மழைக்கால நிவாரணம் கிடைக்க வேண்டும் என 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் வேதாரண்யம் தாசில்தார் சண்முகத்திடம் கோரிக்கை மனு
அளித்தனர்.

Tags : Vedaranyam ,
× RELATED வேதாரண்யத்தில் 3 நாட்களாக மக்களை...