×

சாத்தான்குளம் அருகே தொழிலாளிகள் 2 பேர் தற்கொலை

சாத்தான்குளம், நவ.27: சாத்தான்குளம் அருகே கீழகருங்கடல் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து மகன் மோகன்ராஜ்(32). தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி. தம்பதிக்கு 4 மாத கைக்குழந்தை உள்ளது. மோகன்ராஜிக்கு, கடந்த 5 ஆண்டாக காய்ச்சல் பாதிப்பு இருந்து வந்துள்ளது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு மூளைக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதற்காக நெல்லை அரசு மருத்துவமனை மற்றும் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் பாதிப்பு குறையவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். தகவலறிந்து சாத்தான்குளம் எஸ்.ஐ. சத்தியபாமா மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே கூந்தன்குளம் மாரியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் முருகன் என்ற முருகேசன்(32). இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். முருகேசன், பேய்க்குளத்தில் மனைவியின் பெற்றோர் வீட்டில் தங்கியிருந்து ஆடு வளர்த்து வந்ததுடன் கூலி வேலைக்கும் சென்று வந்தார்.

முருகேசனுக்கு மதுப்பழக்கத்தால் கடன் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆடுகளை விற்று கடனை அடைக்க முடிவு செய்தார். அதற்கு மனைவி மற்றும் குடும்பத்தினர்  எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த முருகேசன், கடந்த 14ம்தேதி விஷம் குடித்து நிலையில் சவேரியார்புரம் விலக்கில் மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை  பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.
சாத்தான்குளம் ஏட்டு பியூலா செல்வகுமாரி வழக்குப்பதிவு செய்தார். எஸ்ஐ பாலகிருஷ்ணன் விசாரித்து வருகிறார்.

Tags : suicide ,Chathankulam ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை