×

சில்வார்பட்டி ஓடையின் குறுக்கே பாலம் தேவை விவசாயிகள் கோரிக்கை

தேவதானப்பட்டி, நவ.26: தேவதானப்பட்டி அருகே உள்ள சில்வார்பட்டி பெரிய ஓடையின் குறுக்கே பாலம் கட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேவதானப்பட்டியின் வடக்கே உள்ள முருகமலையில் இருந்து, தர்மலிங்கபுரம், சில்வார்பட்டி வழியாக ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாய்க்கு பெரிய ஓடை செல்கிறது. இந்த ஓடை சில்வார்பட்டியின் கிழக்கு பகுதியில் உள்ளது.

சில்வார்பட்டியில் பெரும்பாலான விவசாய விளை நிலங்கள் ஓடையை கடந்து கிழக்கு பகுதியில் அமைந்துள்ளன. நிலத்தடி நீரை உயர்த்துவதற்காக பல திட்டங்களின் கீழ் ஓடையின் குறுக்கே ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. மழைக்காலங்களில் ஓடையில் தண்ணீர் வரும்போதும், அருகே உள்ள தடுப்பணை நிரம்பும்போதும் ஓடையில் மழை நீர் தேங்கிநிற்கும். இதனால் விளை நிலங்களுக்கு கால்நடைகளை ஓட்டிச் செல்வதும், விவசாய  இடுபொருட்களை எடுத்துச் செல்வதும், விளைந்தபொருட்களை கொண்டுவருவதற்கும், விவசாயிகளுக்கு பெரும் பிரச்னையாக உள்ளது. எனவே, சில்வார்பட்டி கிழக்கே உள்ள பெரியஓடையின் குறுக்கே பாலம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bridge ,stream ,
× RELATED கட்டி முடிக்கப்பட்ட 6 மாதத்தில்...