×

திருச்சி பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் 16 பவுன் நகை, பணம் திருட்டு

திருச்சி, நவ. 26: திருச்சியில் பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள், பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். திருச்சி கே.கே.நகர் அய்யப்பநகர் நேரு தெருவை சேர்ந்தவர் தர்(55). பொதுப்பணித்துறையில் டிராபிக் அதிகாரியாக உள்ளார். இவர் கடந்த 23ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டார். நேற்றுமுன்தினம் இரவு வீட்டுக்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கேட் மற்றும் மெயின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டினுள் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 16 பவுன் நகைகள், ரூ.85 ஆயிரம் ரொக்கம், பூஜை அறையிலிருந்த வெள்ளி பொருட்கள் கொள்ளைபோனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. மேலும் வழக்கு பதிந்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : house ,officer ,Trichy Public Works ,
× RELATED இந்த ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறதா?