×

கறம்பக்குடி அருகே மினி பேருந்து கவிழ்ந்ததில் திமுக பிரமுகர் பரிதாப சாவு 32 பேர் படுகாயம்

கறம்பக்குடி, நவ.26: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அடுத்த ஆவணம் கை காட்டி பகுதியிலிருந்து மினி பேருந்து கறம்பக்குடி வரை சென்று வருகிறது. இந்த பேருந்து நேற்று திருமணஞ்சேரி அருகே அக்னி ஆற்று பாலத்தை தாண்டி வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த கறம்பக்குடி அடுத்த மந்தக்கொள்ளை கிராமத்தை சேர்ந்த திமுக பிரமுகர் முருகேசன் (49) சம்பவ இடத்தில் உடல் நசுங்கி இறந்தார். மேலும் பேருந்தில் பயணம் செய்த குப்பாயி (60), பழனியம்மாள் (50), செல்லம்மாள், முத்து, தாமரை செல்வி, அம்பிகாபதி உள்ளிட்ட 32 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை, தஞ்சை, கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மின் பஸ் டிரைவர் ஷேக் அப்துல்லா (56) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : DMK ,death ,Parithaba ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்