×

உருவம்பட்டியில் கோழியை விழுங்கிய மலைப்பாம்பு சிக்கியது

புதுக்கோட்டை, நவ.26: உருவம்பட்டியில் 10 அடி மீள மலைப்பாம்பு சிக்கியது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அடுத்த குடுமியான்மலை அருகே உள்ள உருவம்பட்டியில் நேற்று இளைஞர்கள் சிலர் குடியிருப்பு பகுதிக்குள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது அப்பகுதியில் சரசரவென சத்தம் கேட்டுள்ளது. அருகில் சென்று பார்த்தபோ மலைபாம்பு ஒன்று கோழியை விழுங்கிவிட்டு நகர முடியாமல் இருந்துள்ளது. இதை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் அந்த மலைப்பாம்பை பிடித்து, குடுமியான்மலையில் உள்ள வனப்பகுதியில் விட்டனர். பிடிபட்ட மலைப்பாம்பு 10 அடி நீளமும் 15 கிலோ எடையும் இருந்ததாக இளைஞர்கள் தெரிவித்தனர்.

Tags : figurine bar ,
× RELATED வெப்பம் அதிகரிப்பு காரணமாக பொன்னமராவதி முக்கிய சாலைகள் வெறிச்சோடியது