×

ேவலைவாய்ப்பு அலுவலகத்தில் 29ம் தேதி இலவச திறன் பயிற்சி முகாம் தகுதியானோர் பங்கேற்க அழைப்பு

பெரம்பலூர்,நவ.26:பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலம் நடைபெறவுள்ள வேலை வாய்ப்புடன் கூடிய இலவச திறன் பயிற்சி முகாமில் தகுதியானோர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலம் நடைபெறவுள்ள வேலை வாய்ப்புடன் கூடிய இலவச திறன் பயிற்சி முகாமில் தகுதியானோர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள் ளது. பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அலுவலகத்தில் வருகிற 29 ம்தேதி வெள்ளிக்கிழமையன்று வேலைவாய்ப்புடன் கூடிய இலவசத் திறன் பயிற்சிக்கான முகாம் நடைபெ ற உள்ளது.

கட்டணம் ஏது மின்றி முற்றிலும் இலவச மாக 3 மாதம்முதல் 5மாதம் வரையிலான தையல் பயிற்சி, கணிணிபயிற்சி, அழகுகலை மற்றும் செல் போன் பழுது நீக்கல் ஆகி யவற்றிற்கு பயிற்சி வழங் கப்பட்டு, பயிற்சியின் முடி வில் மத்திய அரசின் சான் றிதழ் மற்றும் தனியார் துறையில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தகவல் தெரிவிக்கப்ப ட்டுள்ளது. இந்த முகாமில் 18வயது முதல் 35வயதுவரை உடைய, 8 ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை படித்தவர்கள், தங்களின் சுய விவரப் படி வம், கல்விச்சான்று, ஆதார் அட்டை, சாதிச் சான்று, வங் கிக் கணக்குப் புத்தகம், மற்றும் புகைப்படம் ஆகியவற் றுடன் கலந்துகொண்டு பய ன்பெறலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Free Skills Training Camp ,Employment Office ,
× RELATED தேனியில் இன்று தனியார் துறை...