×

இடைப்பாடி அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து நகை கொள்ளை

இடைப்பாடி, நவ.26:  இடைப்பாடி அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இடைப்பாடி அருகே ஆடையூர் ஊராட்சிக்குட்பட்ட ஆண்டிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்ப கவுண்டர். இவரது மனைவி செல்லம்மாள்(65). மாரியப்ப கவுண்டர் இறந்து விட்ட நிலையில், செல்லம்மாள் தனியாக வசித்து வந்தார். நேற்று காலை 7 மணிக்கு, வீட்டை பூட்டி விட்டு வழக்கம்போல் வயல் வேலைக்கு சென்றார். பின்னர், காலை 11 மணியளவில் வீடு திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த செல்லம்மாள் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ திறந்து கிடந்தது. உள்ளே வைத்திருந்த 4 பவுன் நகையை காணவில்லை. செல்லம்மா வீட்டில் இல்லாததை நோட்டமிட்டு மர்ம ஆசாமிகள் பட்டப்பகலில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், பூலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், எஸ்.ஐ. லாவண்யா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். மேலும், சேலத்தில் இருந்து கைரேகை நிபுணர் வடிவேலு வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தார். பட்டப்பகலில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்ம ஆசாமிகளின் உருவம் பதிவாகியுள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : robbery ,House ,neighborhood ,aisle ,
× RELATED வெள்ளை மாளிகை கேட் மீது மோதிய கார் டிரைவர் பலி