×

தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் பங்கேற்கும் ஜிவி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

மேட்டூர், நவ.22: தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் பங்கேற்கும் தமிழக அணியில் இடம்பிடித்துள்ள மேட்டூர் மாசிலாபாளையம் ஜிவி மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் நடத்தும் தேசிய அளவிலான வில்வித்தை விளையாட்டு போட்டிக்கான மாநில அளவிலான தேர்வு நமக்கல்லில் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகம் முழுவதிலுமிருந்து மாணவ மாணவியர் பங்கேற்றனர்.

இவர்களில் மேட்டூர் ஜிவி மேல்நிலைப்பள்ளி மாணவர் ஓம்ஸ்ரீவிஸ்வா 19 வயதுக்குட்பட்டோர் ரிக்கோர் பிரிவிலும், கிரீஸ்வர் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவிலும் தமிழக அணிக்காக தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் டிசம்பர் 24ம் தேதி முதல் 28ம் தேதிவரை மத்தியப்பிரதேச மாநிலத்தில் தேசிய அளவில் நடைபெறும் வில்வித்தை போட்டிகளில் தமிழக அணி சார்பில் பங்கேற்கவுள்ளனர்.
தமிழக அணிகு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை பள்ளியின் தாளாளர் அன்பழகன், தலைமை ஆசிரியர் ராஜலிங்கம், இயக்குனர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டி சான்று வழங்கினார்கள்.

Tags : GV School ,National Archery Competition ,
× RELATED தேசிய வில்வித்தை போட்டியில் ஜீவி பள்ளி மாணவர்கள் சாதனை