×

சோளிங்கர் அருகே டாஸ்மாக் கடை சுவரை துளையிட்டு ₹70 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருட்டு


சோளிங்கர், நவ.26: சோளிங்கர் அருகே டாஸ்மாக் கடை சுவற்றை துளையிட்டு ₹70 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருடப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாண்டியநெல்லூரில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் மருதாலம் கிராமத்தை சேர்ந்த கமலக்கண்ணன், சோளிங்கரை சேர்ந்த சம்பத் ஆகியோர் விற்பனையாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் விற்பனையை முடித்துக்கொண்டு கடையை பூட்டிவிட்டு சென்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை சோளிங்கர் போலீசார் சோளிங்கர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாண்டியநெல்லூர் டாஸ்மாக் கடையின் பின்புற சுவற்றில் ஓட்டை போட்டு இருப்பதை பார்த்த போலீசார் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனைதொடர்ந்து உடனடியாக கடைக்கு வந்த மேற்பார்வையாளர் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது ஒரு ஆள் நுழையக்கூடிய அளவுக்கு சுவற்றில் துளையிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கடையில் விற்பனைக்காக வைத்திருந்த ₹70 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து டாஸ்மாக் மேற்பார்வையாளர் செந்தில்குமார் சோளிங்கர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு மது பாட்டில்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : Burglary ,Task Shop ,Sholingar ,
× RELATED ரூ.2000 திருடியதாக சந்தேகம்; சிறுவர்களை...