×

நரசிங்கபுரம் கூவம் ஆற்றின் குறுக்கே கிடப்பில் மேம்பாலம் இணைப்பு சாலை பணி

திருவள்ளூர், நவ. 26: கூவம் ஆற்றின் குறுக்கே இரு ஒன்றியங்களை இணைக்கும் வகையில், நரசிங்கபுரம் பகுதியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்திற்கான இணைப்பு சாலை பணிகள் கிடப்பில் உள்ளதால் வாகன ஓட்டிகள் அதிருப்தியில் உள்ளனர். திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் நரசிங்கபுரம் - திருவாலங்காடு ஒன்றியம் களாம்பாக்கம் இடையே, கூவம் ஆற்றில் ரூ.4 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி, கடந்த ஆண்டு துவங்கியது. தொடர்ந்து பணிகள் முடிக்கப்பட்டது.  பாலப்பணிகள் முடிந்தும், இதுவரை நரசிங்கபுரம் மற்றும் களாம்பாக்கம் பகுதியில், மண், ஜல்லி, செம்மண் கொட்டி, பாலத்தை நெடுஞ்சாலையுடன் இணைக்கவில்லை. இது வாகன ஓட்டிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.இதனால், வாகன ஓட்டிகள் 3 கி.மீட்டர் தூரம் உள்ள பேரம்பாக்கம் சென்று, அங்குள்ள பாலம் வழியாக 6 கி.மீட்டர் தூரம் சுற்றி களாம்பாக்கம் செல்லவேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.   எனவே, கடம்பத்தூர் - திருவாலங்காடு ஒன்றியங்களை இணைக்கு வகையில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்துக்கு, இணைப்பு சாலையை உடனடியாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Narasingapuram Koovam River ,
× RELATED புதுப்பாளையம் ஆரணியாற்றில் ₹20...