×

முக்காணி ஆற்றில் மாயமான வாலிபர் சடலமாக மீட்பு

ஆறுமுகநேரி, நவ. 26: முக்காணி ஆற்றில் மாயமான வாலிபரை தீயணைப்பு துறையினர் சடலமாக மீட்டனர். ஆறுமுகநேரி பாரதிநகர் திருமால் மகன் சரவணன்(26), காணியாளர் தெரு பட்டுராஜ் மகன் ராஜேஸ்(30), உசிலம்பட்டியை சேர்ந்த கருப்பையா (45), ஆறுமுகநேரி வடக்கு காமராஜபுரத்தை சேர்ந்த லிங்கபாண்டி மகன் சேர்மத்துரை(26) ஆகியோர் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் முக்காணி ஆற்றில் குளிக்க சென்றனர். இவர்களில் சேர்மத்துரை, இந்த கரையில் இருந்து எதிர்கரைக்கு நீந்தி வருகிறேன். நீங்கள் எனது உடைமைகளை எடுத்துக் கொண்டு மறுகரைக்கு வாருங்கள் எனக்கூறி விட்டு சென்றுள்ளார். ஆற்றின் பாதி தூரம் சென்றதும் கையை மேலே தூக்கிய நிலையில் மாயமானார்.

இதுகுறித்து ஆத்தூர் காவல் நிலையத்திற்கும், திருச்செந்தூர் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு வரை தீயணைப்பு துறையினர் தேடியும் சேர்மத்துரையை கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று காலை மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றின் நடுப்பகுதியில் இறந்த நிலையில் சேர்மத்துரையின் உடலை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆற்றில் மூழ்கி இறந்த சேர்மத்துரைக்கு சுந்தரி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

Tags : Mukkani River ,
× RELATED மாற்றுத்திறனாளியை காப்பாற்ற...