×

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் போக்சோவில் வாலிபர் கைது

திருப்பூர், நவ.26: திருப்பூரில் சிறுமிக்கு திருமண ஆசை வார்த்தை கூறி பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.திருப்பூர் ராக்கியாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (22). இவர் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சிவக்குமாரும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். கடந்த 22ம் தேதியன்று சிவக்குமார் சிறுமியிடம் திருமண செய்து கொள்ளவதாக ஆசை வார்த்தை கூறி வெளியூர் அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நேற்று சிவக்குமா பிடித்து விசாரனை செய்தனர். விசாரனையின் முடிவில் போலீசார் சிவக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.



Tags : Plaintiff ,
× RELATED திருமணமான 4 மாதங்களில் 2வது திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைது