×

குட்டையில் மூழ்கிய டிரைவர் சாவு

கோவை, நவ.26:  கோவை தொண்டாமுத்தூர் கெம்பனூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா (33). ஆட்டோ டிரைவர். இவருக்கு மனைவி, 4 மாத ஆண் குழந்தை உள்ளனர். கார்த்திக் ராஜா அடிக்கடி அட்டுக்கல் பகுதியில் உள்ள நீர் குட்டைக்கு சென்று குளிப்பார். நேற்று முன் தினம் வீட்டை விட்டு அட்டுக்கல் சென்ற கார்த்திக் ராஜா திரும்பி வரவில்லை. இந்நிலையில் அவரது ஆட்டோ அட்டுக்கல் ஆலங்குட்டை நீர் தேக்கம் பகுதியில் இருப்பதை பார்த்த அந்த பகுதி மக்கள் வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் உதவியுடன் நீரில் தேடும் பணி நடந்தது. சுமார் 50 அடி ஆழத்தில் கார்த்திக் ராஜா சடலம் மீட்கப்பட்டது. வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆழமான பகுதிக்கு சென்ற கார்த்திக் ராஜா நீச்சல் தெரியாததால் மூழ்கி இறந்து விட்டதாக தெரிகிறது.


Tags : hut ,
× RELATED இருளர் குழந்தைகளுக்காக ஒற்றை குடிசைக்குள் இயங்கும் ‘அலை!’