×

தஞ்சையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தஞ்சை, நவ. 26: தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 29ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தலைமையில் நடைபெறும் இக்கூட்டம் 29ம் தேதி காலை 10 மணிக்கு துவங்க உள்ளது. இதில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு திட்ட விளக்கம் அளிக்கப்பட உள்ளது. மேலும் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் நீர்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மை பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தோட்டக்கலைத்துறை போன்ற விவசாயம் சார்ந்த கருத்துக்களை மட்டும் தெரிவித்து பயன்பெறலாம். எனவே விவசாயிகள், முன்னோடி விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் அழைப்பு விடுத்துள்ளார்.


Tags : asylum ,
× RELATED ம.பி. காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராவத் பாஜவில் தஞ்சம்