×

புதுப்பட்டினத்தில் கடும் குளிருக்கு பசுமாடு சாவு

கொள்ளிடம், நவ.26: கொள்ளிடம் அருகே புதுப்பட்டினத்தில் கிராமத்தில் கடும் குளிருக்கு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பசுமாடு பலியானதால் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்தது.நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே புதுப்பட்டினம் கிராமம் பள்ளிகூடத் தெருவை சேர்ந்த மூர்த்தி மனைவி சுகன்யா (27). விவசாய தொழிலாளி. அவர் செல்லமாக வளர்த்து வந்த பசுமாடு 9 மாத சினையாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்ததால் பசுமாடு கடும் குளிரால் பாதிக்கப்பட்டு உடல் நலம் குன்றி நேற்று இறந்தது. தகவலறிந்த மாதானம் கால்நடை பொறுப்பு மருத்துவர் ராமபிரபா சம்பவ இடத்திற்கு வந்து இறந்த பசுமாட்டை உடற் ஆய்வு கூறு செய்தார்.


Tags : Greenwood ,death ,
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...