×

ரூ.50 ஆயிரம் பணிக்கொடை வழங்க கோரி ஓய்வுபெற்ற மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆப்ரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

நாகை,நவ.26: பணி ஓய்வுபெற்ற மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆப்ரேட்டர்க்கு ரூ.50 ஆயிரம் பணிக்கொடை வழங்க கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் நாகை அவுரித்திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆர்ப்ரேட்டர் சங்க மாவட்ட செயலாளர் பாலையன் தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்ட துணைத்தலைவர் மாரிமுத்த கோரிக்கைகளை விளக்கி பேசினார்.பணி ஓய்வுபெற்ற மேல்நிலை நீர்தேக்கதொட்டி ஆப்ரேட்டருக்கு ரூ.50 ஆயிரம் பணிக்கொடை வழங்க வேண்டும். மாதம் ரூ.2 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். 7வது ஊதியக்குழு அரசாணைப்படி ஊதியம் மற்றும் நிலுவைத் தொகை வழங்க வேண்டும். கடந்த 2000ம் ஆண்டுக்கு பிறகு பணியில் அமர்த்தப்பட்டவர்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வுபெற்ற துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் பணிக்கொடையும், ரூ.2 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு உரிய ஊதியத்தை மாதம் தோறும் 7ம் தேதிக்குள் வழங்க வேண்டும். மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப கூடுதல் தொழிலாளர்களை நியமனம் செய்ய வேண்டும் ஆகிய கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிஐடியூ மாவட்ட செயலாளர் சீனிமணி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆப்பரேட்டர்கள் சங்க மாவட்ட பொருளாளர் டிஎஸ்மணி, கூட்டுறவு சங்க மாவட்ட தலைவர் எஸ்மணி மற்றும் பலர் பலந்து கொண்டனர்.

Tags : Overhead Tank Operators ,
× RELATED கிராம ஊராட்சி பணியாளர் சங்க ஆலோசனை கூட்டம்