×

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

சீர்காழி. நவ.26:திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது.நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்மவித்யாம்பாள் சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் காசிக்குணையான ஆறு கோயில்களில் ஒன்றாக விளங்குகிறது. பிரம்மவித்யாம்பிகை சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்குவது கூறிப்பிடத்தக்கது. கார்த்திகை சோமவாரத்தையொட்டி சங்காபிஷேகங்கள் தமிழகத்தில் ஒருசில கோயில்களில் மட்டுமே பண்டைய காலத்தொட்டு நடைபெற்று வருகிறது. அதில் ஒருகோயிலாக இந்த கோயில் விளங்குவது கூறிப்பிடத்தக்கது.

நேற்று கார்த்திகை இராண்டாவது சோமவாரத்தையொட்டி சுவேதாரண்யேஸ்வரர் சுவாமிக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி 1008 சங்குகள் சிவ வடிவத்தில் சன்னதியின் முன்பகுதியில் வைக்கபட்டு அலங்கரிக்கபட்டு இருந்தது. மேலும் சங்குகளில் நறுமணப் பொருட்களால் ஆன புனிதநீர் நிரப்பட்டது. பின்பு ஆலய அர்ச்சகர் சங்கர்சிவாச்சாரியார் தலைமையில் வேதவிற்பனர்களை கொண்டு மகா யாகம் நடைபெற்றது. அதனைதொடர்ந்து வலம்புரி மற்றும் இடம்புரி சங்குகள் கோயிலிலன் பிரகாரத்தில் ஊர்வலமாக மேளதாளம் முழங்கிட கொண்டு செல்லபட்டன. பின்னர் சுவேதாரண்யேஸ்வரருக்கு 1008 சங்குகளிலிருந்த புனிதநீரை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சுவாமி மற்றும் அம்மனுக்கு தீபாராதனை காட்டபட்டது. இதில் கோயில் நிர்வாக அதிகாரி முருகன், பேஸ்கர் திருஞானம், மேலாளர் சிவக்குமார் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags : Thiruvenkadu Swetharanyeswarar Temple ,
× RELATED திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி