×

தீவிர களப்பணியாற்ற வேண்டும் பேரூர் கூட்டத்தில் தீர்மானம்

முத்துப்பேட்டை, நவ.22: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை திமுக பேரூர் கழக கூட்டம் அவைத் தலைவர் இராமஜெயம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் செயலாளர் கார்த்திக் முன்னிலை வகித்தார். முன்னதாக பேரூர் கழக பொறுப்பாளர் சியாநவாஸ்கான் வரவேற்றார். கூட்டத்தில் எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமான ஆலோசனை நடைபெற்றது. கூட்ட முடிவில் பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுக சார்பில் வேட்பாளரை நிறுத்துவது, திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தொண்டர்கள் தீவிர களப்பணியாற்றி வெற்றி பெற வைப்பது. மேலும் முத்துப்பேட்டை நகரத்தில் உள்ள 18வார்டுகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்வதானவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நகர நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், சார்பு அணி பொறுப்பாளர்கள் உட்பட திமுகவினர் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் நகர தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் முகமது சப்வான் நன்றி கூறினார்.

Tags : meeting ,Perur ,
× RELATED பெண்களுக்கு எதிரான கொடுமைகளை...