பாப்பாரப்பட்டி, நவ.22: பென்னாகரம் தாலுகா தேமுதிக சார்பில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள், அதற்கான விருப்ப மனுக்களை, தர்மபுரி கட்சி அலுவலகத்தில் வழங்கினர். இதில், 20க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை கொடுத்தனர். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் உதயகுமார், மாநில நெசவாளர் அணி செயலாளர் ஏகாம்பரம், மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.