×

மொரப்பூர் பஸ் ஸ்டாண்டில் கடைகளை ஏலம் விட வலியுறுத்தல்

அரூர், நவ.22: மொரப்பூர் பஸ் ஸ்டாண்ட் திப்பம்பட்டி கூட்ரோடில், ஊரக வளர்ச்சி துறை சார்பில் கட்டப்பட்ட கடைகளை ஏலம் விட ேவண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மொரப்பூர் பஸ் ஸ்டாண்ட் மற்றும் திப்பம்பட்டி கூட்ரோட்டில், ஊரக வளர்ச்சி துறை சார்பில், 45 கடைகள் கட்டப்பட்டுள்ளது. கடைகளும் கட்டப்பட்டு 3 ஆண்டுகளாகியும், இதுவரை திறக்கப்படவில்லை. கடைகளை ஏலம் விடுவதாக 2முறை அறிவித்தும், ஏலம் நடத்தப்படவில்லை. இதனால் சில்லறை சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். தனியார் கடை உரிமையாளர்கள் கடைகளை அதிக வாடகைக்கு விடுகின்றனர். அரசு கடைகளை ஏலம் விட்டால் மக்களுக்கு குறைந்த வாடகையில் கடைகள் கிடைப்பதுடன், அரசுக்கும் வருவாய் கிடைக்கும். எனவே, உடனடியாக கடைகளை ஏலம் விடக்கோரி, மொரப்பூர் ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த ேபாவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : shops ,bus stand ,Morapur ,
× RELATED குப்பை கிடங்காக மாறிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: பயணிகள் கடும் அவதி