×

கூட்டுறவு வார விழாவில் 551 பேருக்கு கடன் உதவி

தேனி நவ.22: தேனியில் நடந்த கூட்டுறவு வார விழாவில் 551 பேருக்கு ரூ.7 கோடியே 49 லட்சத்து 30 ஆயிரத்து 807 அளவிலான கடன் தொகையை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.
தேனியில்  66வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நடந்தது. கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை வகித்தார். மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பாண்டியன் முன்னிலை  வகித்தார். தேனி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முத்துகுமாரசுவாமி வரவேற்றார்.
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 551 பேருக்கு ரூ.7 கோடியே 49 லட்சத்து 30 ஆயிரத்து 807 அளவிலான கடன் தொகையை வழங்கினார். மேலும் கூட்டுறவு வார விழாவிற்காக பள்ளிகளில் நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்களும்,பரிககளும் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் கம்பம் எம்எல்ஏ  ஜக்கையன், தேனி கூட்டுறவு கட்டிட சங்கத் தலைவர் டாக்டர் .  தியாகராஜன், முன்னாள் எம்பி  சையதுகான், முன்னாள் எம்எல்ஏ கணேசன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் முருகேசன், வக்கீல். கிருஷ்ணகுமார்  மற்றும் கூட்டுறவு  சங்க நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.

Tags : co-operatives ,
× RELATED 9 கூட்டுறவு, ஒரு பொதுத்துறை சர்க்கரை...