×

சூலூர் அருகே கார்கள் மோதல் ஐயப்ப பக்தர்கள் படுகாயம்

சூலூர், நவ.22: சூலூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஐயப்ப பக்தர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.தெலங்கானா மாநிலம் விசாராபாத் பகுதியைச் சேர்தவர்கள் ரவி(48), அனுமந்தையா(38) இவர்களும் இவரது நண்பர்கள் சிலரும் சேர்ந்து சபரிமலை செல்வதற்காக நேற்று முன்தினம் காலை தெலங்கானா மாநிலத்தில் இருந்து இரண்டு கார்களில் புறப்பட்டனர். இவர்கள் நேற்று மதியம் சூலூர் பட்டணம் பிரிவு அருகே வரும்போது, எதிரில் வந்த மற்றொரு  கார் மோதியது. இதில் ரவி மற்றும் அனுமந்தையா உள்ளிட்ட 4 பேர்  படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்களுடன் மற்றொரு காரில் வந்தவர்கள் அருகிலிருந்தவர்கள் உதவியுடன் அவர்களை மீட்டு சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags : Devotees ,car collision ,Sulur ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...