×

மாவட்டம் டூவீலர் பிரசார பேரணி

ராஜபாளையம், நவ.20: தொழிலாளர் நலச் சட்டங்களை 4 தொகுப்பாக மாற்றுவதை கை விடக்கோரியும், அனைத்து தொழிலாளர்களுக்கும் மாத ஊதியம் குறைந்தது ரூ.18 ஆயிரம் வழங்குதல் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ராஜபாளையத்தில் சிஐடியூ ஒருங்கிணைப்பு குழு சார்பில் டூவீலர் பிரசார பேரணி நடைபெற்றது.

நகரில் உள்ள பஞ்சு மார்க்கெட் பகுதியில் டூவீலர் பிரசார பேரணியை சிஐடியூ மாவட்ட உதவி தலைவர் தொடங்கி வைத்தார். சேத்தூர், தேவதானம், சொக்கநாதன்புத்தூர், புத்தூர், தளவாய்புரம், முறம்பு, சமுசிகாபுரம், அய்யனாபுரம், சங்கரபாண்டியபுரம் உள்ளிட்ட ஊர்கள் வழியாக சென்ற பிரசார பேரணி சத்திரப்பட்டியில் நிறைவடைந்தது.

Tags : District Twoweiler ,
× RELATED சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்