×

மயிலாடும்பாறையில் உள்ளாட்சி தேர்தல் திமுக விருப்ப மனு

வருஷநாடு, நவ. 20:  மயிலாடும்பாறை கிராமத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு திமுக சார்பில் விருப்பமனு செய்யும் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
திமுக மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் ஆகியோர் தலைமை வகித்து பேசினர். கடமலை, மயிலை ஒன்றிய செயலாளர் வக்கீல் சுப்பிரமணி, மாநில செயற்குழு உறுப்பினர் குருஇளங்கோ, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தமிழரசன், தேசிங்குராஜன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் பிரபாகரன், மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் மணிமாறன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பவுன்ராஜ், ஊராட்சி செயலாளர்கள் மச்சக்காளை, ஆனந்தன், ஜெயச்சந்திரன், முருகன், சின்னச்சாமி, தென்னரசு, கருப்பையா, மாவட்ட பிரதிநிதிகள் மொக்கராசு, மாடசாமி, முன்னாள் ஊராட்சி மன்றதலைவர்கள் ஞானசேகரன், நீதிராஜன், ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் சக்திவேல் ஒன்றிய வர்த்தக அணி துணைச் செயலாளர் சேர்மலை, ஒன்றிய துணைச் செயலாளர் வைகை சுப்பு, ஒன்றிய மாணவரணி செயலாளர் சரவணன், கணேசன் உள்ளிட்ட கிளைக் கழக நிர்வாகிகள், ஊராட்சி கழக நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து
கொண்டனர். கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி பதவிகளுக்கான விருப்பமனு செய்யும் நிகழ்ச்சி திமுக சார்பில் நடைபெற்றது.

Tags : DMK ,Mayiladuthurai ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி