×

பகுஜன் சமாஜ் கட்சி போராட்டம் பெயர் பலகை அகற்றுவதில் இரு பிரிவினரிடையே பிரச்னை

தேவதானப்பட்டி, நவ. 20:தேவதானப்பட்டி-வத்தலக்குண்டு சாலையில் புல்லக்காபட்டி பிரிவு உள்ளது. இந்த பிரிவு அருகில் ஒரு சமூகத்தைச் சேர்ந்த உருவம் பொறித்த பெயர் பலகை உள்ளது. அதன் அருகே மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த கோயில் உள்ளது. அந்த கோயில் முன்பாக மணிகள் கட்டி தொங்கவிடப்பட்டுள்ளன. பெயர் பலகை மற்றும் மணிகள் இடத்தை மாற்றி வைப்பதில் இரு பிரிவினர்களிடையே பல மாதங்களாக தொடர்ந்து பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் பெரியகுளம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் இடமாற்றி வைப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று இது தொடர்பாக இரு பிரிவினரிடையே பிரச்னை ஏற்பட்டது. இரு தரப்பினரும் அதிகளவில் கூடவே, பெரியகுளம் டிஎஸ்பி ஆறுமுகம் தலைமையிலான போலீசார் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று பெரியகுளம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கூறியதையடுத்து கூட்டம் கலைந்து சென்றது. அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுதால் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

Tags :
× RELATED கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகளால்...