×

பாம்பன் பாலத்தில் டூவீலர் விபத்தில் ஒருவர் பலி

ராமேஸ்வரம், நவ. 20:  ராமநாதபுரம் வெளிப்பட்டினத்தை சேர்ந்த உசேன்(50) என்பவர் நேற்று டூவீலரில் பாம்பன் வந்தார். பின்னர் மீண்டும் ராமநாதபுரத்திற்கு சென்றபோது, பாம்பன் பாலத்தின் மையப்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பாலத்தின் நடைமேடையில் பொருத்தப்பட்டிருந்த மின்கம்பத்தில் உசேன் மோதி கீழே விழுந்துள்ளார். இதில் உசேனின் தலை மின்கம்ப போல்ட்டின் மீது மோதியதில், ஹெல்மெட்டை துளைத்துக்கொண்டு இரும்பு போல்ட் தலையில் குத்தியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் கிடைத்து வந்த ஹைவே பெட்ரோலிங் போலீசார் உசேன் உடலை கைப்பற்றி ராமேஸ்வரம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். பாம்பன் பாலத்தில் அவ்வப்போது வாகன விபத்து ஏற்படுவதும், பலர் இறப்பதும், மயிரிழையில் சிலர் உயிர்தப்புவதும் வழக்கமாக உள்ளது. பாம்பன் பாலத்தில் விபத்து மற்றும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் வாகனங்களின் வேகக்கட்டுப்பாட்டை தீவிரமாக அமல்படுத்திடவும், பாலத்தின் இருபுறமும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : accident ,
× RELATED பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற...