×

மாஜிஸ்திரேட் முன்னிலையில் கொலை வழக்கு கைதி உடல் பிரேதப் பரிசோதனை

சேலம், நவ.20: சேலத்தில் இறந்த கொலை வழக்கு கைதி உடல், நீதித்துறை நடுவர் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகேயுள்ள மேலக்காட்டை சேர்ந்தவர் பெருமாள் மகன் கோவிந்தராஜ்(42). இவரை இரட்டை கொலை வழக்கில் போலீசார் கைது செய்து கடந்த 2017ம் ஆண்டு சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கடந்த 17ம் தேதி கோவிந்தராஜ்,    வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். உடனடியாக மத்திய சிறையில் உள்ள மருத்துவ குழவினர் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அப்போது அவர், மயங்கி விழுந்தார். இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கோவிந்தராஜ்  உயிரிழந்தார். அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நேற்று சேலம் 5வது நீதித்துறை நடுவர் கார்த்திகேயன்  முன்னிலையில் கோவிந்தராஜ் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags : prisoner ,magistrate ,
× RELATED ராஜஸ்தானில் பலாத்கார காயங்களை காட்டச்சொன்ன நீதிபதி மீது வழக்கு..!!