×

மத நல்லிணக்க கருத்தரங்கம்

நாமக்கல், நவ.20: நாமக்கல்லில், மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளையொட்டி, மத்திய- மாநில அரசு பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மத நல்லிணக்க கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் காளியப்பன் தலைமை வகித்து பேசினார். அரசு ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் குப்புசாமி வரவேற்றார். அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் ராஜ்குமார் கோரிக்கையை விளக்கி பேசினார். மாவட்ட செயலாளர் இளங்கோவன், ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ராமசாமி, தலைவர் மணியாரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED எக்ஸல் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா