×

சேந்தமங்கலத்தில் இந்திராகாந்தி பிறந்தநாள் விழா

சேந்தமங்கலம், நவ.20: சேந்தமங்கலம் பழைய பஸ் நிலையத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி 102வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சாமி ஜெகநாதன் தலைமை தாங்கி இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.     விழாவில் மகளிரணி தலைவி மகேஸ்வரி, நகர தலைவர் ராஜா, நிர்வாகிகள் மாராயி, பூங்கோதை, மனோஜ், கலைச்செல்வி, மகாலட்சுமி, சுகன்யா உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், பேளுக்குறிச்சியில் இந்திராகாந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு இந்திராகாந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.திருச்செங்கோடு: திருச்செங்கோடு புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள காமராஜர் சிலை அருகில் இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் சர்வேயர் செல்வகுமார் தலைமை வகித்து இந்திரா காந்தி படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில நெசவாளரணி கதிரேசன், பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, கிருஷ்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நகர துணைத்தலைவர் குறிஞ்சி கோவிந்தசாமி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னாள் கவுன்சிலர் ஈஸ்வரன் வரவேற்றார். நகர பொதுச்செயலாளர் சந்திரசேகர் நன்றி கூறினார்.

Tags : Indira Gandhi Birthday Celebration ,Sandamangalam ,
× RELATED சேந்தமங்கலத்தில் பயனாளிகளுக்கு ₹1.85 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்