×

ேதயிலை தோட்டத்தில் உலா வரும் கரடி

மஞ்சூர், நவ.20: மஞ்சூர் அருகே தேயிலை தோட்டத்தில் உலா வரும் கரடியால் தொழிலாளர்கள் பீதி அடைந்துள்ளார்கள். மஞ்சூர் அருகே உள்ள மெரிலேண்ட் பழைய பெட்ரோல் பங்க் அருகே தேயிலை தோட்டங்கள் உள்ளன. நேற்று முன்தின் இப்பகுதி தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்கள் சிலர் இலை பறித்து கொண்டிருந்தனர். அப்போது தோட்டத்தின் நடுவே இருந்த பாறை ஒன்றில் கரடி ஒன்று அமர்ந்து ஓய்வெடுத்து கொண்டிருந்தது. இதை கண்ட தொழிலாளர்கள் பீதி அடைந்து உடனடியாக பணியை பாதியில் நிறுத்தியதுடன் தோட்டத்தில் இருந்து வெளியேறினார்கள். கடந்த இரு தினங்களுக்கு முன்பும் இதே பகுதியில் தேயிலை செடிகளுக்கு இடையே கரடி மறைந்திருந்ததை கண்டு தொழிலாளர்கள் இலை பறிக்க தோட்டத்திற்கு செல்வதையே தவிர்த்தனர். இதையடுத்து கரடியின் நடமாட்டத்தை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : garden ,
× RELATED தாவரவியல் பூங்கா புல் மைதானங்களில் புதிய மண் கொட்டும் பணி மும்முரம்