×

கிணற்றில் பெண் சடலம் மீட்பு

கோவை, நவ.20: கோவை அருகே பெண் ஒருவர் கிணற்றில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். கோவை அன்னூர் அடுத்த நல்லிசெட்டிபாளையம் அருகே உள்ள குரும்பபாளையத்தை சேர்ந்தவர் வெளியங்கிரி. இவருக்கு அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் விவசாய கிணறு உள்ளது. இந்நிலையில் நேற்று கிணற்றில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அந்த வழியாக சென்றவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அழுகிய நிலையில் சடலமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா? என போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : corpse recovery ,well ,
× RELATED “நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தை...