×

இந்திராகாந்தி பிறந்தநாள் விழா

ஈரோடு, நவ. 20: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 102வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் ரவி  இந்திராகாந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், மண்டல தலைவர்கள் அய்யூப்அலி, திருச்செல்வம், விவேகானந்தன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பெரியசாமி, மாரியப்பன், மாவட்ட துணை தலைவர்கள் ராஜேஸ்ராஜப்பா, செல்லகுமாரசாமி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் கண்ணப்பன், கனகராஜ், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ், துணை தலைவர் பாட்சா, துணை பொதுச் செயலாளர் முகமதுஅர்சத், இளைஞர் காங்கிரஸ் தலைவர் சாமுவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மணல்மேட்டில் இந்திராகாந்தியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் தலைமை தாங்கினார். இதில், முன்னாள் எம்.எல்.ஏ. பழனிச்சாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்தார்.

இதில் வட்டார தலைவர்கள் கோபாலகிருஷ்ணன், முத்துக்குமார், மாவட்ட பொருளாளர் ரவி, சிறுபான்மைத்துறை மாவட்ட தலைவர் வினோத்குமார், ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் கண்ணன், மாவட்ட கலைபிரிவு தலைவர் ஜாபர்சாதிக், மாவட்ட செயலாளர் பூவை ராஜன், இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் விஜய் வேம்பரசன், பிரபு, சந்துரு, விஜய் உட்பட பலர் கலந்து கொண்டனர். இைதத்தொடர்ந்து, சென்னிமலையில் பாரதியார் ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.



Tags : Birthday Party ,Indira Gandhi ,
× RELATED வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில்...