×

அவமதிப்பு வழக்கில் யுவராஜ் கோர்ட்டில் ஆஜர்

நாமக்கல், நவ.19:யுவராஜ் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு டிசம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் என்ஜினீயர் கோகுல்ராஜ் (23) கொலை வழக்கில் கைதான சங்ககிரி தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாமக்கல் முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று மாஜிஸ்திரேட்டு ஜெயந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீசார், திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள யுவராஜை ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் 2ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

Tags : Yuvraj ,court ,
× RELATED ஜெய், யோகி பாபு இணையும் பேபி அன்ட் பேபி