×

கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு

தர்மபுரி, நவ.19:  சமுதாய நல்லிணக்கம் மற்றும் தேசிய  ஒருமைப்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பாக பணியாற்றியவர்கள் கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இது குறித்து தர்மபுரி கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கை:  இந்திய அளவில் நற்பெயரையும், புகழையும் ஈட்டித்தரும் வகையில், சமுதாய நல்லிணக்கத்திற்காகவும், தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு இந்திய அரசு ஆண்டு தோறும் கபீர் புரஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2019ம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கபீர் புரஸ்கார் விருதிற்கான விண்ணப்பங்கள், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 25ம் தேதி அன்று மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டரங்கத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, கலெக்டர் பரிந்துரைகளுடன் அரசுக்கு அனுப்பிவைக்கப்படும். எனவே தகுதியுள்ளவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா