×

திருப்புத்தூரில் ஆசிரியர் கூட்டணி முப்பெரும் விழா

திருப்புத்தூர், நவ.19:  திருப்புத்தூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்ட கிளையின் சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட தலைவர் அருள் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ரெங்கராஜன் முன்னிலை வகித்தார். சிவகங்கை மாவட்டச் செயலாளர் அன்பரசு பிரபாகர் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளரும், அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் துணைப் பொதுச்செயலாளருமான ரெங்கராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழாவில் போராட்டத்தின் போது சிறை சென்ற 4 ஆசிரியர்களுக்கு கணையாழி அணிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக தமிழாசிரியர் மாநாட்டில் கலந்து கொண்ட 10 ஆசிரியர்களை பாராட்டும் விதமாக கேடயம் வழங்கப்பட்டது. போராட்டத்தின் போது கட்டாய பணிமாறுதல் செய்யப்பட்ட மாவட்டத்தை சேர்ந்த 8 ஆசிரியர்களுக்கு  கேடயமும், பொன்னாடையும் அணிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.இதில் சிவகங்கை முன்னாள் மாவட்ட செயலாளர் மருதநாயகம், அருளொளி அறக்கட்டளை நிர்வாகி முத்துசரவணன், சிவகங்கை மாவட்ட தலைவர் (ஓய்வு பிரிவு) முத்தையா, சிவகங்கை மாவட்ட செயலாளர் (ஓய்வு பிரிவு) ஆறுமுகம்,  சிவகங்கை மாவட்ட பொருளாளர் (ஓய்வு பிரிவு) பம்பையன், மாநில பொதுக்குழு (ஓய்வு பிரிவு) காளிமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட துணைத்தலைவர்கள், மாவட்ட துணைச் செயலாளர்கள், மகளிர் செயற்குழு உறுப்பினர்கள், வட்டார பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் பொன்னுசாமி நன்றி கூறினார்.

Tags : Teacher Coalition ,
× RELATED அரியலூர், திருமானூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்