×

ஒக்குபட்டி கண்மாய்க்கு தண்ணீர் திறக்க வேண்டும் விவசாயிகள் மனு

சிவகங்கை, நவ. 19: சிவகங்கை அருகே பெரிய ஒக்குபட்டி கண்மாய்க்கு நீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் கலெக்டர் ஜெயகாந்தனிடம் மனு அளித்தனர். சிவகங்கை அருகே பெரிய ஒக்குபட்டி கிராம விவசாயிகள் கலெக்டர் ஜெயகாந்தனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சிவகங்கை தாலுகா பெரிய ஒக்குப்பட்டி கிராமத்தில் 500 ஏக்கர் பாசனப்பகுதி உள்ளது. பெரியஒக்குபட்டி கண்மாய்க்கு பெரியாறு நீர் வரும் வரத்து கால்வாய் உள்ளது.

பாசன கால்வாயில் இருந்து கண்மாய்க்கு நீர் திறக்கும் மடை 500மீ தூரத்தில் உள்ளது. இந்த மடை பல ஆண்டுகளாக திறக்கப்படவில்லை. நீர் நாயத்தான்பட்டி, அம்பலகாரன்பட்டி செல்லும்போது பெரியஒக்குபட்டிக்கு மட்டும் திறக்கப்படுவதில்லை. எங்கள் கண்மாய்க்கு நீர் திறக்கப்பட்டு ஏழு ஆண்டு ஆகிறது. எனவே மடையை திறந்து கண்மாய்க்கு நீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றொரு கண்மாயான நற்கனிமங்களம் கண்மாய்க்கு ஆற்றுப்பாசனம் இல்லை. இந்த கண்மாய்க்கு 400மீ தூரம் உள்ள அம்பலகாரன்பட்டி ஆற்று கால்வாயுடன் கண்மாய் வரத்து கால்வாயை இணைக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Tags : Omakapatti ,
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்