×

உயிர்பலி வாங்க காத்திருக்கும் பாலம்

ஆர்.எஸ்.மங்கலம், நவ.19: ஆர்.எஸ்.மங்கலம் அருகே கூத்தன்வயலில் உள்ள பாலம் இடிந்து ஆபத்தை விளைவிக்கும் விதமாக உள்ளது. அதனை சரி செய்ய பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் பஞ்சாயத்து யூனியனில் கடலூர் ஊராட்சியில் கூத்தன்வயல் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு செல்வதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து மேற்காக சாலை போடப்பட்டுள்ளது. இந்த சாலையின் குறுக்கே ஒரு கல்வெட்டு பாலம் அமைக்கப்பட்டிருந்தது. அது கடந்த ஒரு ஆண்டு காலமாக உடைந்து முற்றிலும் சேதமடைந்து கம்பிகள் மட்டும் தெரிகின்றது.

இதனை சரி செய்து தர வேண்டிய அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த சாலை வழியாகத்தான் கூத்தன்வயல், கீழ சித்தூர்வாடி, சித்தக்கரைசல் போன்ற கிராமங்களுக்கு செல்ல வேண்டிய பொதுமக்கள் சென்று வருகின்றனர். இரவு நேரங்களில் நடந்து செல்பவர்களும் டூவீலர்களில் செல்பவர்களும் இந்த ஆபத்தான இடத்தை கடந்து தான் செல்ல வேண்டியுள்ளது. இதனால் விபத்து ஏதும் நடந்து விடுமோ என்ற ஒரு வித அச்சத்துடனே பயணம் செய்ய வேண்டியுள்ளது என பொதுமக்கள் அச்சமடைகின்றனர். ஏதேனும் விபத்து ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை