×

கல்லட்டி பகுதியில் சேற்றில் சிக்கி காட்டுமாடு பலி

ஊட்டி, நவ. 19: ஊட்டி - மசினகுடி சாலையில் கல்லட்டி மலைப்பாதையில் ஏக்குணி அருகே சாலையோரம் உள்ள விவசாய நிலத்தில் காட்டுமாடு ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த காட்டெருமைைய பார்வையிட்டனர். வயது முதிர்ந்த காட்ெடருமை என்பதும், விவசாய நிலத்தில் உள்ள கால்வாயில் உள்ள சேற்றில் சிக்கி உயிரிழந்ததும் தெரியவந்தது. இதை தொடர்ந்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அப்பகுதியிலேயே புதைக்கப்பட்டது.

புற்றுநோயால் பாதித்தவர்களுக்கு உதவி

பந்தலூர், நவ. 19 :  எருமாடு மற்றும் சேரம்பாடி சுற்றுவட்டாரம் பகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உதவும் விதமாக, காவல் தொண்டு அமைப்பு சார்பில் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று எருமாடு பகுதியில் நடைப்பெற்றது. சேரம்பாடி பகுதியை சேர்ந்த ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நித்யா(13) என்ற மாணவிக்கு ரூபாய் ஒரு லட்சத்து 12 ஆயிரம் வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கு, அமைபின் தலைவர் அன்வர், செயலாளர் அனீஸ், பொருளாளர் அசீஸ், சேரம்பாடி எஸ்ஐ கிருஷ்ணன் உள்ளிட பலர் கலந்துகொண்டனர்.

Tags : area ,Kallatti ,
× RELATED வாட்டி வதைக்கும்...