×

கார்டன் மந்தில் சிறுத்தை தாக்கி எருமை கன்று பலி

ஊட்டி, நவ. 19: நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு மேல்பகுதியில் தோடர் பழங்குடியின மக்கள் வசிக்க கூடிய கார்டன் மந்து கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் தோடர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஏராளமான தோடர் வளர்ப்பு எருமைகள் வளர்த்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு அருகாமையில் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு இப்பகுதியில் நார்சே குட்டன் என்பவரின் எருமை கொட்டகைக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று, அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த பிறந்து ஒரு வாரமே ஆன பெண் வளர்ப்பு எருமை கன்றை சிறுத்தை தாக்கி கொன்றது.  எருமை கன்று கட்டி வைக்கப்பட்டிருந்தால் சிறுத்தையால் அதனை வனப்பகுதிக்குள் இழுத்து செல்ல முடியவில்லை. இதுதொடர்பான நார்சேகுட்டன் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் இறந்த எருமை கன்றின் உடலை பார்வையிட்டனர். பின்னர் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Tags : Buffalo ,
× RELATED அலமாதி அருகே கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது: 5 கிலோ பறிமுதல்