×

ஆந்திரா மாநிலத்தில் இருந்து 2,500 டன் ரேஷன் அரிசி ரயிலில் ஈரோடு வந்தது

ஈரோடு,  நவ. 19: ஆந்திரா மாநிலத்தில் பொது விநியோக திட்டத்திற்காக கொள்முதல்  செய்யப்பட்ட 2,500 டன் ரேஷன் அரிசி ரயில் மூலம் ஈரோடு வந்தடைந்தது. தமிழகத்தில்  பொது விநியோக திட்டத்தின் கீழ் மக்களுக்கு அரிசி விநியோகிக்கப்பட்டு  வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக ஆந்திரா  மாநிலம் விஜயவாடா பகுதியில் இருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்  சார்பில் 2,500 டன் பச்சரிசி கொள்முதல் செய்யப்பட்டது. இந்த அரிசி, 50கிலோ  மூட்டைகளாக தனி சரக்கு ரயிலில் 42 பெட்டிகளில் ஈரோடு ரயில்வே கூட்ஸ்  செட்டிற்கு நேற்று வந்தது. இந்த அரிசி மூட்டைகளை நூற்றுக்கணக்கான  லாரிகளில் ஏற்றி, ஈரோட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின்  மத்திய சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த அரிசிகள்  மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பிரித்து வழங்கப்படும் என  அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Erode ,Andhra Pradesh ,
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உயிருக்கு போராடும் யானை..!!