×

ஆர்.கே.பேட்டை அருகே 100 பேருக்கு இலவச ஆடுகள்

பள்ளிப்பட்டு, நவ.19: ஆர்.கே. பேட்டை அடுத்த  தேவலம்பாபுரம் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நேற்று  இலவச வெள்ளாடுகள்  வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு திருத்தணி கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் டாக்டர் தாமோதரன் தலைமை வகித்தார். கால்நடை உதவி மருத்துவர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.  இந்நிகழ்ச்சியில், பி.எம்.நரசிம்மன் எம்.எல்.ஏ பங்கேற்று  100 பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.  ஒன்றிய குழு முன்னாள் தலைவர்  ஜெயராமன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.


Tags : RKpet ,
× RELATED நிலம் அளவீடு செய்ய லஞ்சம்: பெண் சர்வேயர் கைது