×

மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

திருவள்ளூர், நவ. 19: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் பொது மக்களின் கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டார். இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் பல்வேறு குறைகள் குறித்து மனுக்களை அளித்தனர்.இதில், பட்டா மற்றும் சிட்டா கோரி 133 மனுக்கள், முதியோர் உதவித்தொகைகோரி 69 மனுக்கள், ரேஷன் அட்டை கேட்டு 7 மனுக்கள், வங்கி கடனுதவிகோரி 16 மனுக்கள், வேலை வாய்ப்புகோரி 39 மனுக்கள் உட்பட மொத்தம் 400 மனுக்கள்பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி உட்பட அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.


Tags :
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...