×

பஸ் - கார் மோதல்: ஆசிரியர் பலி

சென்னை, நவ.19: காஞ்சிபுரம் அடுத்த டோல்கேட் பகுதியில் அரசு பஸ், கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில், காரை ஓட்டி வந்த அரசு பள்ளி ஆசிரியர் பலியானார். காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (55). நசரத்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் தமிழ் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். தமிழக தமிழாசிரியர் கழகத்தின் மாவட்டப் பொறுப்பாளராகவும் இருந்தார். இவரது மனைவி சகுந்தலவதனி (48). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.நேற்று காலை செல்வராஜ், காஞ்சிபுரத்தில் இருந்து நசரத்பேட்டை நோக்கி காரில் புறப்பட்டார். டோல்கேட் அருகே வளைவில் திரும்பும்போது, எதிரே வந்த அரசு பஸ் கார் மீது நேருக்குநேர் பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. காரை ஓட்டி வந்த செல்வராஜ், காருக்குள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.இது குறித்து விஷ்ணுகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.



Tags : collision ,Teacher ,
× RELATED கொல்கத்தா விமான நிலைய ஓடுபாதையில் 2 விமானங்கள் மோதல் தவிர்ப்பு..!!