×

மாணவனை சுட்டுக்கொன்ற வழக்கு தேனி கோர்ட்டில் சரணடைந்த ரவுடிக்கு போலீஸ் காவல்

சென்னை, நவ. 19: மாணவன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சரணடைந்த பிரபல ரவுடியை, போலீஸ் காவலில் எடுத்து, ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.தாம்பரம் அருகே வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் உள்ள வேங்கடமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஷோபனா என்பவரின் மகன் முகேஷ்குமார் (19), பாலிடெக்னிக் கல்லூரி மாணவன். இவர், கடந்த 4ம் தேதி நண்பன் விஜய் வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.இந்த கொலை வழக்கில் விஜயை தாழம்பூர் போலீசார் மூன்று நாட்களாக போலீஸ் காவலில் வைத்து விசாரித்து, மீண்டும் சிறையில் அடைத்தனர்.இந்த சம்பவத்தில் ெதாடர்புடையை பெருமாட்டுநல்லூரை சேர்ந்த பிரபல ரவுடி செல்வம், தேனி கோர்ட்டில் சரணடைந்தார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தாழம்பூர் போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு செய்தனர். இதை விசாரித்த நீதிபதி காயத்ரி போலீசாரின் மனுவை ஏற்றுக் கொண்டு பெருமாட்டுநல்லூர் செல்வத்தை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

Tags : Rudy ,court ,shooting student ,Theni ,
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...