×

மகளிருக்கான சிறப்பு குறைதீர் முகாம்

காஞ்சிபுரம், நவ.19: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மகளிருக்கான சிறப்பு குறைதீர் முகாம் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் கண்ணகி பாக்கியநாதன் தலைமையில் நேற்று நடந்தது.இதில் விதவை, முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை, வரதட்சணை கொடுமை, கலப்பு திருமணத்தால் ஏற்பட்ட பிரச்னைகள் உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்த மனுக்கள் பெறப்பட்டன. அதனை, உரிய அலுவலர்களுக்கு பரிந்துரைத்து, நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.மேலும் குழந்தைகள் உதவி மையம் - 1098, அவசர கால உதவி எண் - 112, முதியோர் உதவி எண் - 181, காவலர் உதவி எண் - 100, அவசர கால மருத்துவ ஊர்தி  108 ஆகிய எண்களில் மகளிருக்கு உதவி தேவைப்படின் அணுகலாம் என்ற விவரம் எடுத்துரைக்கப்பட்டது.
இதில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் உமாமகேஸ்வரி, இணை இயக்குநர் யமுனா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன், மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : grievance camp ,women ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...