×

எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் பகுதி நேர நூலகம் திறப்பு

திருவொற்றியூர்:  திருவொற்றியூர் கிளை நூலகத்தில் 52வது தேசிய வார நூலக விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் உள்ள 102வது பிளாக்கில் பகுதி நேர நூலகம் அமைக்கப்பட்டு, அதன்  திறப்பு விழா நேற்று நடந்தது. வாசகர் வட்ட நிர்வாகிகள் வரதராஜன் துரைராஜ், சுப்பிரமணி ஆகியோர்  நூலகத்தை திறந்து வைத்தனர்.  அதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களின் பேரணி நடைபெற்றது. அப்போது புத்தகம் வாசிப்பின் அவசியம், நூலகத்தின் பயன்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதாகைகளை கையில் ஏந்தி  மாணவர்கள் சுனாமி குடியிருப்பு  முழுவதும் பேரணியாக சென்றனர்.நூலகர் பாண்டியன், வாசகர்கள் சிவகுமார், வீரக்குமார், தலைமை ஆசிரியர்,  ஆசிரியைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : library ,
× RELATED திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் குரூப்...