- உதயர்பாளையம் ஆண்கள்
- மேல்நிலை பள்ளி
- மைதானத்தை சுற்றி வளைக்க நடவடிக்கை எடுக்கவும்: ஓய்வூதியதாரர் சங்கக் கூட்டத்தை வலியுறுத்துதல்
ஜெயங்கொண்டம், நவ. 14: உடையார்பாளையம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலுக்கு சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பென்ஷனர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.உடையார்பாளையம் தெற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நகர அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர் சங்க கூட்டம் நடந்தது. தலைவர் விருத்தகாசி தலைமை வகித்தார். கனகசபை, ஷாஜகான் மற்றும் கோவிந்தசாமி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் துணைத்தலைவர் பெரியசாமி, ஆறுமுகம், மாயவன், துணை செயலாளர் பழனிவேல், சிங்காரவேலு ஆகியோர் பேசினர்.